கட்சி சொன்னால் ராகுலுக்கு வழிவிட்டு பதவி விலகுவேன்: மன்மோகன் சிங்
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும் பட்சத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலக தான் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அப்படி எதுவும் இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வில்லை என்றார் அவர்.
இந்தியப் பிரதமர், நான்கு ஆண்டுகளில் முதல் தடவையாக நேற்று புதுடில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்தார். “ராகுல் முழு அமைச்சராக எல்லா தகுதிகளையும் கொண்டவர். “இது குறித்து ராகுலிடம் பல முறை ஆலோசித் திருக்கிறேன். அவர்தான் மறுத்து வருகிறார். “ராகுல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். “காங்கிரஸ் கட்சி எப்போது இளைஞர்கள் கையில் முக்கிய ஆட்சி பொறுப்பை கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறதோ அப்போது அதற்கு நான் வழி விடுவேன்.
“எனது விருப்பமும் அதுதான்,” என்று திரு சிங் தெரிவித்துள்ளார்.
பொருளியல், இந்தியா பாகிஸ்தான் உறவு, விலைவாசி முதலான பல விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். சோனியா காந்திக்கும் தமக்கும் இடையில் அவநம்பிக்கை எவையும் இல்லை என்றும் கருத்து இடைவெளியும் இல்லை என்றும் சொன்ன பிரதமர், தமக்கு மிகவும் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவது காங்கிரஸ் தலைவி சோனியாவா அல்லது தம் மனைவி கூர்ச்சரன் கோரா என்பது பற்றியும் கருத்து கூறினார்.
“என் வாழ்க்கையில் இரண்டு பேரின் ஆலோசனைகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
“சோனியா காந்தி, என்னுடைய மனைவி இரண்டு பேரிடம் இருந்தும் ஆலோசனைகளை, யோசனைகளைப் பெறுவதற்கு நான் கொடுத்துவைத்து இருக்கிறேன். “இருவரும் வேறுபட்ட விவகாரங்களில் எனக்கு ஆலோசனை கூறி வருகிறார்கள்,” என்று பிரதமர் சொன்னார்.
0 comments :
Post a Comment