கணேசபுரம் மலக்குழியில் காண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும் ஊடகங்களும்.
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் மீள் குடியேறியவர்கள் தமது வீடுகள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து வருகின்றனர். அவ்வாறு வீடொன்றின் உரிமையாளர் ஒருவர் தனது மலக்குழியை சுத்தம் செய்தபோது அதிலிருந்து கறுப்பு பைகளில் பெண்களின் சடல்கள் வெளிவந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தது.
இவ்வுடலங்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் வவுனியா மாவட்ட சட்ட வைத்தி அதிகாரி பா. சிறிதரன் அவர்களின் மேற்பார்வையில் குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வெளியே எடுக்கப்பட்ட பைகளில் வெறும் எலும்புக் கூடுகளே காணப்பட்டுள்ளது. இவ் எலும்புக்கூடுகளுக்கான உடலங்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் இக்குழிகளில் போடப்பட்டிருக்கலாம் என மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேற்படி கறுப்பு பைகள் இராணுவ மற்றும் புலிகள் தரப்பினரால் உடலங்களை பரிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டவையாகும். இவற்றில் அடைக்கப்படும் உடலங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பழுதடையாமல் வைத்திருக்கும் தன்மை கொண்டவையாகும் இப்பைகள். ஆனால் இவ்வுடலங்கள் யாருடையது ? எதற்காக இக்குழியில் போடப்பட்டன என்ற கேள்விக்கு பலரும் பலவழிகளிலும் விடைதேடலாம். பையிலிருந்து மரபுவழி இராணும் ஒன்று பாவிக்கும் இடுப்பு பட்டிகள் காணப்படுகின்றது எனும்போது இது இராணுவம் அல்லது புலிகளுடைய சடலம் என்பதும் அவர்கள் போர்முனையில் சீருடையில் மரணித்தவை என்பதும் தெளிவானது.
இவ்வுடலங்கள் அண்ணளவாக எப்போது இக்குழியில் போடப்பட்டிருக்கும் என்ற பகுப்பாய்வு அறிக்கை வெளிவரும்போது இது எத்தரப்பினரால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் ஒன்றிற்கு வரமுடியுமே தவிர இது புலிகளாலோ அன்றில் இராணுவத்தினராலோ மேற்கொள்ளப்பட்டது என்ற முடிவுக்கு எவராலும் வந்துவிடமுடியாது. காரணம் இறுதி யுத்தம் என்பது இருதரப்புமே தமது முழு இராணுவ மற்றும் புலனாய்வு உச்ச வலுவை பயன்படுத்திய யுத்தமாகும். உடலம் போடப்பட்ட காலப்பகுதியில் எத்தரப்பு கணேசபுரம் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என அறிந்து கொண்டாலும் இருதரப்பினரும் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து எதிரியை கொன்றொழித்து பின்னர் தடயம் இல்லாமல் செய்வதற்காக அல்லது தாம் நுழைந்தமை தெரியாமல் இருப்பதற்காக இவ்வாறான விடயங்களை புரிந்தே உள்ளனர்.
அடுத்து புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமது சகாக்களின் உடலங்களை கையாள முடியாதவர்களாக கண்ட இடங்களிலெல்லாம் தீயிட்டுக்கொளுத்திய சம்பவங்களின் சாட்சியங்கள் இன்று எம்முன்னே நிற்கின்றனர். அதன் அடிப்படையில் இவை புலிகளின் முக்கியஸ்தர்களின் சடலங்களாகக்கூட இருக்கமுடியும். உடலங்களை எடுத்துச் செல்ல முடியாத புலிகள் தாம் தற்காலிகமாக பின்வாங்குகிறோம் என நினைத்து இவ்விடங்களை மீண்டும் கைப்பற்றும்போது ஒன்றில் சடலங்களை தோண்டி எடுத்து அஞ்சலி செலுத்தலாம் அல்லது சிங்கள இராணுவம் பொதுமக்களை கொன்று மலகூடத்தினுள் போட்டுள்ளது என மக்களை ஏமாற்றலாம் என்ற நினைப்பில் போட்டிருக்கவும் முடியும்.
இவ்வாறு இவ்விடயம் தொடர்பாக சந்தேகங்களையும் ஊகங்களையும் பெருக்கி கொண்டே போகலாம். அவ்வாறு பெருக்கி கொண்டு செல்வதால் கிடைக்கக்கூடிய லாபங்கள் என்னவென்பதே எம் முன்நிற்கின்ற கேள்விகள். இவ்விடயம் தொடர்பான செய்திகள் கசிந்தவுடன் பையிலிருந்து மீட்க்கப்பட்ட உடல் எச்சங்கள் தொடர்பான எவ்வித ஆதாரங்களுமில்லாத ஊடகங்கள் பல எழுந்தமானமாக கிளிநொச்சியில் கிணறுகளிலிருந்து பெண்களின் சடலங்கள் வெளிவருகின்றன என்ற பீதியை கிளப்பி விட்டனர். இவ்வாறான செய்திகளை பரப்புவதில் இன்று முன்னாள் நிதர்சனம்.கொம் சேதுவின் இடத்தினை லண்டனிலிருந்து ஊடகத்தொழில் புரியும் முன்னாள் புளொட் உறுப்பினர் கையிலெடுத்துள்ளார். முற்றிலும் என்ஜிஓ க்களினதும் ஏகாதிபத்தியங்களினதும் கைக்கூலியாக மாறியுள்ள இவர் ஒரு காலகட்டத்தில் ஜேவிபி எதிர் கருத்துக்களை கொண்டிருந்ததுடன் தற்போது முன்னாள் ஜேவிபி பிரதேச தலைவர்களில் ஒருவரான ஊடகவியலாரின் பரிவில் இவ்வாறான செய்திகளை பரப்புவதில் முன்னணியில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது. மேற்படி ஊடகவியலாளர் என்ஜிஓ க்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ளதுடன் அவர்களின் உதவியுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களையும் எடுத்து லண்டனிலிருந்து இயங்கும் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்குகின்றார். குறிப்பிட்ட தமிழ் ஊடகம் ஏதோ ஊடக ஜாம்பவான்கள் போன்று அப்படங்களுக்கு முத்திரையும் குத்தி கதையும் விடுகின்றனர். அவர்கள் விடும் கதைகளில் மக்களுக்கு என்ன பயன்? இவை ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவிடுமா என்பது கேள்வி.
எதுவாக இருந்தாலும் மேற்படி செய்தியினை வைத்து கொஞ்ச நாட்களுக்கு காலம் ஓட்டலாம் என நினைத்திருந்து புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு நாளை அல்லது இன்னும் ஓரிரு தினங்களில் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி பதில் சொல்வார் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment