Monday, May 17, 2010

காதலிகளிடம் கொள்ளையடித்த காதலர்கள் இருவர் கைது.

காதலிகளுக்கு பாணத்தினுள் போதை மருந்தை கொடுத்து மயக்கிவிட்டு கொள்ளையடித்த இரு இளைஞர்களை அம்பநாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, காதலிகளை விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்ற காதலர்கள் அறையில் வைத்து அவர்களுக்கு பாணத்துடன் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளதுடன் , மயங்கிய இரு யுவதிகளிடமுமிருந்த தங்க நகைகள், பணம், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு யுவதிகளை விடுதி அறையில் மயக்க நிலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார், இவர்கள் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் யுவதிகளை தொடர்சியாக ஏமாற்றிவரும் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கூறுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com