Friday, May 28, 2010

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடை- முறைப்படுத்த முடியாது. JHU - NFF

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை -இந்திய உடன்படிக்கைக்கமைய மாகாண சபைகளுக்கான காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை அரச தலைவர்கள் அதற்கு எதிராக அரசாங்கத்திற்குள் போராட்டங்களை முன்னெடுப்பது என ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளனர்.

குறைந்தளவு அதிகாரங்களுடன் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கேட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைமையில் இந்திய அழுத்தங்களுக்கு எதிராக முனைப்புகளை மேற்கொள்வது குறித்து தமது கட்சி அடுத்த சில தினங்களில் ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுக்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் முன்னணியின் முக்கிஸ்தர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com