கிரனேட் தாக்குதலில் பத்துப்பேர் காயம்.
ரக்வான பிரதேசத்திலுள்ள தோட்ட லயம் அறையொன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கிரனேட் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களுள் 2 பெண்கள் , 2 சிறுவர்கள் , 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment