Monday, May 24, 2010

முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களுக்கு சாரதிப் பயிற்யுடன் தொழில் வாய்ப்புக்கள்

தம்மிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்களுக்கு விசேட வாகன சாரதிப் பயிற்சி வழங்கி அவர்களை வாகனச் சாரதிகளாக மாற்ற அரசாங்கம் முற்பட்டுள்ளது. இதற்கேதுவாக கோண்டாவிலிலுள்ள இலங்கைப் போக்குவரத்து சபையுடன் இணைந்து யாழ் மாவட்ட ராணுவத்தரப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக 100 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இடம்பெற்றிருந்தது. படையதிகாரிகளால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பமாகின. எனினும் அவர்களது குடும்பத்தினர் வழமை போன்று அச்சத்துடனேயே காணப்பட்டனர். சாரதிப் பயற்சிக்காக வந்தவர்களுடன் பிள்ளைகள் அல்லது மனைவியர் பிரசன்னமாகியிருந்தததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

படையினரால் விடுவிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் இந்தப் பெற்றோரே அல்லது மனைவிமார் அல்லது பிள்ளைகள் அச்சம் கொண்டுள்ளதனை இது வெளிப்படுத்துகின்றது. முதற்கட்டமாக 100 பேருக்கு பயிற்சிகள் வழங்கி அவர்கள் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அண்மையில் ராணுவத்தரப்பு அறிவித்திருந்தது தெரிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com