Monday, May 31, 2010

சரணடையும் புலிகளை கொல்லமாட்டோம் என நம்பியாரிடம் கூறவில்லை. பாலித ஹோகன

சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க் கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் பாலித ஹோகன்ன ஆகியோர் உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தமை குறித்துப் பாலித ஹோகன்ன விடம் இன்னர் சிற்றிப் பிரஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட மாட்டார்கள் என்று தான் எந்த உறுதி மொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்து விட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தைக் கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் ஹோகன்ன தெரிவித்தார் என இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான ஜனாதிபதி மகிந்த விடமும் கோத்தபாயவிடமும் கருத்தைக் கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம் அவரிடம் இது குறித்து கேட்ட றிவதற்கு முற்பட்டபோது-பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு ஹோகன்ன அனுமதிகவில்லை என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய ஊடக கழகத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அங்கு ஊடகவி யலாளர்களைச் சந்திக்காமல் வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடகக் கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினைப் படு கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com