Friday, May 28, 2010

இலங்கை உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆசிய வங்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பு.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்உட்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ குரோடா ஜனாதிபதியிடம் உறுதியளித் துள்ளார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருஹிகோ குரோடா தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தற்போது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து தான் பெரிதும் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இத்திட்டங்கள் நடைமுறைப்படு த்துவதன் ஊடாக இதுவரை கிடைத்துள்ள சாதகத்தன்மை குறித்தும் தான் திருப்தியடை வதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்குபாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கைக்கான தனது இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று 28 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com