ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம்: விமான சேவை பாதிப்பு
ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் சீற்றம் அடைந்துள்ளதால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை மூட்டம் ஐரோப்பாவின் வடகிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் இந்தூர், பெலிங்கம் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து அங்கு வந்து சேர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக கடந்த மாதம் மத்தியில் ஐரோப்பாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் 4 ஆயிரம் கோடி அளவிற்கு விமான நிறுவனங்கள் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment