இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா வை தலையிட வேண்டாமென்கிறது அரசு.
அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமுடனான முதலாவது சந்திப்பின்போது இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினை நிறுத்துமாறும் வேண்டியுள்ளார்.
இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment