Monday, May 17, 2010

நளினியின் புகார் குறித்து விசாரணை செய்ய அரச உத்தரவு.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவத்து நளினி அண்மையில் சிறைத்துறை ஏடிஜிபி கே.ஆர்.ஷ்யாம் சுந்தருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருந்தார். அதில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உணவில் நஞ்சு கலக்க முயற்சி நடந்திருப்பதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் தமக்குக் கொடுமை இழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நுளினியின் மேற்படி புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இந்தத் தகவலை தமிழக சட்ட அமைச்சர் துரை முருகன் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வியெழுப்பியபோதே, அமைச்சர் துரைமுருகன், நளினியின் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி கோவிந்தராஜன் தலைமையிலான இந்தக் குழுவில் பெண் அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருப்பதாகவும், விரைவில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு தாக்கல் செய்யும் எனவும் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com