Saturday, May 29, 2010

சரத் பொன்சேகாவின் உரிமைகளுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் , ரொபர்ட் ஓ பிளெக் ,

இராணுவத் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலயத்திற்கு பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலளார் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கள் தொடர்பில் சிவில் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகள் சட்ட திட்டங்களுக்கு அமைவான முறையில் நடைபெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பினைத் தொடர்ந்து, ரொபர்ட் ஓ பிளெக் இதனை அறிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஐ.தே.க ஜனாதிபதியிடம் கோரிக்கை ,

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் யோசனைகளுக்கு செவி சாய்க்கத் தயார் என அண்மையில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தமது கருத்திற்கு ஜனாதிபதி செவி மடுத்ததாகவும், அதேபோன்று இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments :

Anonymous ,  June 2, 2010 at 9:02 PM  

accutane and scarring

http://accutane.socialgo.com

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com