Monday, May 31, 2010

கரவெட்டியில் பெண் கொலை. நகைகள் கொள்ளை.

வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் வீட்டிலிருந்த வரை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டி யைச் சேர்ந்த ஜெயபாலா விஜயலட்சுமி (வயது 54) என்பவரே கொல்லப்பட்டடுள்ளார்.

மோட்டார் சைகிளில் சென்ற நபரொருவர் பெண்ணை வெளியே இழுத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com