Tuesday, May 18, 2010

நாடுபூராகவும் மின்னலுக்கு இலக்காகி 8 பேர் மரணம்.

கடந்த நாட்களாக நாடு பூராகவும் பெய்துவரும் கடும்மழை இடிமின்னல் காரணமாக கடந்த சனிக்கிழமையிலிருந்து செவ்வாய் காலைவரை 8 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மழைகாரணமாக இதுவரை 50 விடுகள் முற்றாக நாசமாகியுள்ளதுடன் 200000 பேர் நாடுபூராகவும் இடம்பெயர்ந்துள்ளனர். அதிகமான இழப்புக்கள் நாட்டின் மேற்கு மத்திய வடமேற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ளது.

ரயில் மற்றும் வாகனப்போக்குவரத்து அசமந்தகாலநிலை காரணமாக மந்தமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்ததில் 20 வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

சர்வதேச விமானநிலையத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமானப்பயணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் விமானநிலையத்தை வந்தடையுமாறு விமான நிலைய அதிகாரிகள் வேண்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com