பொன்கேகாவின் வழக்கு ஜூன் 7ம் திகதி : ஐ.நா நிரந்தர பிதிநிதயிடம் வாக்குமூலம்.
புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த அவ்வியக்கத்தின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் உத்தரவிட்டிருந்தார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக கூறப்படும் செய்தி தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஜெனரல் பொன்சேகா மீது கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் பதியப்பட்டுள்ள வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி செய்தி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத கொலைகளுக்கான விசேட பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தப் பிரதிநிதி ஷேனுக்காக செனவிரட்ணவிடம் பெற்றுக்கொண்ட விழக்கம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடமிருந்து வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுள்ளதாக மன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
மஜிஸ்ரேட் சம்பா ஜானிகி முன் எடுத்துக்கொள்ளப்பட்ட மேற்படி வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்று கொண்டுவரப்பட்டிருந்தார்.
அதேநேரம் ஐ.நா வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேற்படி அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பான்கீமூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment