களியாட்ட விடுதிகள் முற்றுகையிடப்படும்.
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள களியாட்ட விடுதிகள் மற்றும் கரோக்கி பார்கள் என்பன மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரால் முற்றுகையிடப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்கு மதுபாண விற்பனை மற்றும் வயது குறைந்தோர் உள்நுழைவதற்கு அனுமதி வழங்குதல் என்பவற்றில் சட்ட ஒழுங்கு முறைகள் மீறப்படுவதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இம்முற்றுகைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் கடந்தவாரம் இவ்வாறான களியாட்ட கடந்த வாரம் 15 வயது யுவதி ஒருத்தி மதுபோதையில் கைது செய்யப்பட்டமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment