இத்தாலியில் இரு இலங்கையர்கள் குத்திக் கொலை.
இத்தாலி, ப்ஃளோரன்ஸ் நகரில் உள்ள ரெஸ்ருரன்ட ஒன்றில் இலங்கையர்கள் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. உணவகத்தில் இடம்பெற்ற வாய்த்தர்க்கும் கொலையில் முடிவடைந்துள்ளதுடன் சந்தேக நபர் இத்தாலியப் பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் ராஜகிரியவைச் சேர்ந்த கமால் நிஸாந்த ரணசூரிய, வெள்ளவத்தையைச் சேர்ந்த சுதத் ரோகண என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடலங்களை இலங்கை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment