Friday, April 16, 2010

போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு – இங்கிலாந்து ஆசிரியை கைது

இங்கிலாந்தில், போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக ஆசிரியை ஒருவர் கைதாகியுள்ளார். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா கிளின்ட்ரி (25). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க 3 மாணவர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர்களுக்கு மது பானம் கொடுத்தார். மது அருந்திய மயக்கத்தில் மாணவர்களுக்கு, ஆசிரியை ஹன்னா மீது மோகம் பிறந்துள்ளது. ஆசிரியையை முத்தமிடுவது என முடிவு செய்து போட்டி வைத்தனர். யார் முதலில் முத்தமிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் திடீரென பயமும், தயக்கமும் வந்தது. இருப்பினும், ஒரு மாணவன் துணிச்சலுடன் ஆசிரியைக்கு முத்தம் கொடுத்தான்.

போதை அதிகமாகிப் போனதால் மூன்று பேரும் ஆசிரியை வீட்டிலேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தனக்கு முத்தமிட்ட மாணவனை அழைத்து அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் ஆசிரியை ஹன்னா.

இது வெளியில் தெரிய வரவே பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று மூன்று மாணவர்களும் மறுத்து விட்டனர். ஆனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதை தனது தாயாரிடம் சொன்னான் அந்த மாணவன். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஹன்னா கைது செய்யப்பட்டார். அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com