யாழ்ப்பாணத்தில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி
"யாழ்ப்பாணத்திற்கான உங்கள் நுழைவாயில்" எனும் தொனிப் பொருளில் அமைந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் மத்திய கல்லூரியில் நேற்று ஆரம்பித்த இந்த வர்த்தகக் கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனமும் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. 200இற்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்களைக் கொண்டிருக்கும் இந்த வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாஇ மலேசியா மற்றும் தென்னிலங்கையின் பிரபல நிறுவனங்கள் கம்பனிகளும் பங்கேற்கின்றன. அவை மட்டுமன்றி வடபகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களும் இதில் பங்கு கொள்கின்றன.
20 இந்திய நிறுவனங்கள் உள்ளடங்கிய 200 நிறுவனங்கள் பங்குபற்றும் இந்தக் கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு தினமும் 20,000 பேர் வந்துசெல்கிறார்கள். குறித்த மூன்று தினங்களும் பல்வேறு தலைப்புகளிலான தொடர் கருத்தரங்கும் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறும். மேலும், யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் கண்கவர் சாகஸ நிகழ்வுகளும் பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் மற்றும் கார்ணிவேல் சவாரிகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுவருகின்றன.
0 comments :
Post a Comment