Tuesday, March 23, 2010

டிஎன்ஏ ஆதரவாளரான யாழ் இளைஞன் கொழும்பில் கைது.

ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் யாழ் மாவட்ட ஆதரவாளரான கரவெட்டியைச் சேர்ந்த சுப்ரமணியம் சண்முகதாசன் எனும் இளைஞன் கொழும்பு வந்துபோது கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இளைஞன் தமது ஆதரவாளர் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி தெரிவிக்கின்றது. இது தொடர்பாக ஜேவிபி சார்பு இணையத்தளமான லங்காறுத் எனும் இணையத்தளத்தில், தமது ஆதரவாளரான குறிப்பிட்ட இளைஞனைக் கைது செய்த பொலிஸார் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பொலிஸாருக்கு தனது கடவுச் சீட்டை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழர் என்ற காரணத்தினால் அவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்து நான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இந்நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி யின் காரியாலயம் யாழ் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன் அங்கு பல இளைஞர்கள் ஜேவிபி யினருடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் அவர்களுக்கு யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவச் சிப்பாய்களிடமிருந்து மிகுந்த வரவேற்பும் உதவிகளும் கிடைப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment