Sunday, March 28, 2010

ரத்கமவில் ரிவோல்வர் தொழிற்சாலை முற்றுகை.

ரத்தகமவில் இயங்கிவந்த சட்டவிரோ உள்நாட்டு கைத்துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ரத்தகம பூசா பிரதேசத்தில் வைத்து உள்நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இம் முற்றுகை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அங்கிருந்து புதிதாக உற்பத்தியாகியிருந்த உள்நாட்டு ரிவோல்வர்கள், மற்றும் அதை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் இரும்புக் குண்டுகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை குற்றவியல் கோவையில் உள்நாட்டில் துப்பாக்கி போன்ற உயிராபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள் தயாரிப்பது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு மரணதண்டனை வரை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com