Tuesday, March 30, 2010

ஜெனரல் பொன்சேகாவே பிரதமந்திரி. ஜேவிபி

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அமையப்பெறவுள்ள தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக ஜெனரல் பொன்சேகாவே நியமிக்கப்படுவார் என ஜேவிபி யின் பிரச்சாரச் செயலாளரும், ஜனநாயகத் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான விஜித கேரத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தமது கட்சி அதிக எண்ணிக்கையான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் எனவும் தேசிய நல்லிணக்க அரசு நிறுவப்படுவது உறுதி எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் , ஐக்கிய தேசிய முன்னணியிலுமிருந்து பாராளுமன்றிற்கு தெரிவாகவுள்ள பல உறுப்பினர்கள் தேசிய நல்லிணக்க அரசிற்கு ஆதரவளிப்பதாக எமக்கு உறுதியளித்துள்ளனர் என மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment