Wednesday, March 10, 2010

டீன்ஏ ஒரு ஆசனத்தையேனும் பெற்றால் பாராளுமன்றிலிருந்து வெளியேறுவேன். மேர்வின்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி பாராளுமன்றத்திற்காக ஒரு ஆசனத்தை தன்னும் பெற்றுக்கொண்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வதாக பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியில் போட்டியிடும் அவர் அதிகூடிய விருப்புவாக்குகளுடன் பாராளுமன்றுக்கு தெரிவாவேன் எனவும் உறுதிபட கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் தலைமை வேட்டபாளராக பசில் ராஜபக்ச போட்டியிடுகின்றார்.

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் வெற்றிபெற்றால் மேவின் சில்வாவுடன் உள்ள பாதாள உலக குழுக்களை சிறையில் அடைப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment