Tuesday, March 9, 2010

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தின் ஊடாக கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் இன்று கூட்டப்பட்டு அவசரகால நீடிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அவசரகாலச் சட்டம் 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தினை எதிர்த்து ஜேவிபி, ஐ.தே.க, த.தே.கூ மற்றும் மனோ கணேசன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்பட்டு மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment