Thursday, March 11, 2010

மார்பக புற்று நோயை கண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோதனை: அமெரிக்க மருத்துவர்கள்

மனித உடலில் தினந்தோறும் செல்கள் அழிவதும் புதிதாக உருவாவதும் இயற்கையான நிகழ்வுகள். அழியும் செல்களோடு டி.என்.ஏ., க்கள் கசிவதும் உண்டு. இவ்வாறு கசிந்து வரும் டி.என்.ஏ.,க்களை ஆய்வு செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள குரோனிக்ஸ் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிலையம் நிரூபித்துள்ளது. இந்த பரிசோதனை மூலம் 70 சதவீதம் மார்பக புற்று நோய் இருப்பதையும், இல்லாத நிலையை 100 சதவீதமும் கண்டறிய முடியும்.

No comments:

Post a Comment