Wednesday, March 17, 2010

சுமண தேரர் உட்பட ஐவர் கைது.

மாளிகாவத்தை பௌத்த விகாரையின் பிரதம பிக்கு சுமண தேரர் உட்பட 5 ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டங்களில் மேற்படி பௌத்த விகாரையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட சுமண தேரர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று அவரை கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்த பொலிஸார் விகாரையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்வதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்து ஐவரையும் விளக்க மறியலில் வைக்கக்கோரினர்.

சுமண தேரர், தமிழ் செல்வன், தம்மிக்க அத்தனாயக்க, ராஜபாலன், எஸ் சுப்ரமணியம் ஆகியோரை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ரேட் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment