Wednesday, March 31, 2010

ஜப்பானில் இலங்கையர்கள் அரசிற்கு எதிராக ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டம்.

ஜப்பான் தலைநகர் ரோக்கியோவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் முன்பாக இலங்கையர்கள் கடந்த 28ம் திகதி, இலங்கை அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாடாத்தியுள்ளனர். „இலங்கையில் ஜனநாயத்திற்கான அமைப்பு – ஜப்பான்' எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கணிசமானளவு இலங்கையர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கையில் ஜனநாயகத்தையும் சிறந்த ஆட்சியையும் நிலைநாட்டு, ஜெனரல் பொன்சேகாவை விடுவி என்றகோஷங்களை எழுப்பியிருந்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் ஐ.நா அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். அவ் மகஜரில் ஐ.நா இலங்கை அரசை, ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வலியுறுத்தவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment