Wednesday, March 10, 2010

புலிகளின் ஆதரவாளர்களே எனது பயணத்தை தடை செய்தனர். பாலித ஹோகன.

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன நாளை புதன் கிழமை கனடா டொரன்டோ பல்கலைக்கழககத்தின் விரிவுரை ஒன்றை நிகழ்த்த இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் மார்கிரட் மெக்கோன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலித்த ஹோகன விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலேயே தனது விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் சுமத்திப்பட்டுள்ள நாடொன்றின் பிரதிநிதியெனக் குறிப்பிட்டு, கனடாவில் உள்ள மாவணர்கள் பாலித ஹோகன குறிப்பிட்ட விரிவுரையில் பங்கெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment