Saturday, March 6, 2010

ஸ்ரீபதி சூரியாராட்சியின் மனைவி புதிய சாதனை : அரசுடன் இணைந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கம்பஹா மாவட்டத் தலைவியாகவும் ஐ. தே. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமாகவுள்ள காலச்சென்ற ஸ்ரீபதி சூரியாராட்சியின் மனைவி 48 மணித்தியாலயங்களுள் முன்று அரசியல் கட்சிகளின் அங்கத்துவத்தை கொண்டவராக இலங்கை அரசியலில் பாரிய சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.

கடந்த 3ம் திகதி மங்கள சமரவீரவின் செயற்பாடுகளை விமர்சித்தவராக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு அதன் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட அவர் மறுநாள் நான்காம் திகதி அலரி மாளிகை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் கரு ஜெயசூரியவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்தி தான் சகல பதிவிகளிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment