Wednesday, March 24, 2010

ஜெனரல் பொன்சேகாவிற்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்த அரசு முனைகிறது. ஜேவிபி.

ஜெனரல் பொன்சேகாவிற்கான உணவினை தடுத்தும், சுவாசத்திற்கு தேவையான போதியளவு காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தியும் அரசாங்கம் அவருக்கு இயற்கை மரணத்தை விளைவிக்க முயல்வதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றஞ்சாட்டியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்ட விடயத்தை தெரிவித்த ஜேவிபி யின் பிரச்சாரச் செயலாளர் விஜித கேரத், ஜெனரல் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கான காற்றோட்டம் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுடன் கடந்த திங்கட் கிழமை ஜெனரல் பொன்சேகாவின் மனைவி தனது பிரத்தியேக விவகாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்த காரணத்தால் ஜெனரலின் உறவினர்களில் ஒருவர் அவருக்கான உணவை எடுத்துச் சென்றபோது, அவ்வுணவை கையளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமைகளை அதானிக்கும்போது அரசாங்கம் அவருக்கு இயற்கை மரணம் ஒன்றை விளைவிக்கு எத்தனிப்பதாக தமக்கு சந்தேகம் உருவாகியுள்ளதாகவும் ஜேவிபி பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment