Wednesday, March 24, 2010

பொன்சேகா தேர்தலில் குதித்தபோது ஏன் இராணுவச் சட்டம் பலிக்கவில்லை. சரத் என் சில்வா

ஜெனரல் பொன்சேகா தேர்தலில் போட்டியிடும்போது அரசாங்கம் அவர் மீது இராணுவச் சட்டத்தினை ஏன் பிரயோகிக்கவில்லை என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று ஜெயவர்த்தன நிலையத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் பேசிய அவர் தேர்தல் காலங்களில் இராணுவச் சட்டதிட்டங்கள் ஜெனரல் பொன்சேகாவிற்கு உரித்துடையதற்றதாக இருந்ததா என்ற கேள்வியை ஜனாதிபதி அவர்களிடம் கேட்க விரும்புவதாக தெரிவித்துள்ளதுடன் பழிவாங்கும் நோக்குடனேயே பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment