Wednesday, March 24, 2010

வெற்றிக்கிண்ணத்திற்கு அளிக்கும் வாக்கு பொன்சேகாவின் விடுதலையை கொண்டுவராது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிக்கிண்ணத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் முன்னணியினாலேயே அரசொன்றை நிறுவ முடியும் எனவும், ஜெனரல் பொன்சேகாவின் விடுதலையை ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீஐடி யினர் தன்னிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கான பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது எனவும், முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தல் பிரச்சார வேலைகளுக்காக ஜெனரல் பொன்சேகாவினால் அமர்த்ததப்பட்டார்களா? என்ற கேள்விகளும் சீஐடியினரால் கேட்கப்பட்டதாக அம்மாநாட்டில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment