Monday, March 15, 2010

தமது கட்சி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த கோரும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள்.

அரசியல் கட்சிகள் தத்தமது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பவ்ரல் , சீஎம்ஈபி என்கின்ற அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளது. இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைகளில் அதிகமானவை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே இடம்பெறுவது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு வாக்கு தேடுவதிலும் பார்க்க தமக்கு விருப்பு வாக்குகளை தேடுவதிலேயே வேட்பாளர்கள் முனைப்பு காட்டி வருவதுடன், சக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார காரியாலங்கள் தாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment