Friday, March 5, 2010

நவநீதம்பிள்ளையின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார் மஹிந்த சமரசிங்க.

இலங்கையில் நடைபெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் வருடாந்த அமர்வில் அறிக்கை தயாரித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கவேண்டும் என்றும், இதற்காக சர்வதேச நாடுகள் உதவுமுடியும் எனவும் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த மே மாதம் யுத்தம் முடிவடைந்த நிலையில்,இலங்கை அரசு சமர்பித்த யோசனைகள் சபையில் நிறைவேற்றப்படாதது குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment