Monday, March 1, 2010

இராணுவ மேஜர் கைது. இருவர் தேடப்படுகின்றனர்.

பம்பலப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கலாட்டா செய்த இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்விடுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றை அடுத்து தனது கைத்துப்பாக்கியை எடுத்து விடுதியிலிருந்து உழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அவர் அங்கிருந்து பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளார்.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சித் குமார எனப்படும் மேஜர் இன்று கல்கிசை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்யுமாறு பொலிஸாரை பணித்துள்ளது.

No comments:

Post a Comment