Thursday, March 4, 2010

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 13ம் அமர்வுகள் கடந்த 1ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இவ்வமர்வுகள் எதிர்வரும் 26ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி நவநீதம்பிள்ளை இன்று அவரது வருடாந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளார். அதில் இலங்கை விபரம் சுட்டிக்காட்டப்படும் என தெரியவருகின்றது.

இவ்வமர்வுகளில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் கலந்து கொள்கின்றார். மனித உரிமைகள் அமைச்சருக்கு தேர்தல் வேலைப்பளு காரணமாக அவர் இம்வமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment