Tuesday, March 2, 2010

தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. உள்வீட்டு மோதல்களே அதிகம்.

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பாரமளிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வன்முறைகளில் அதிகமானவை ஆழும் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே இடம்பெற்றுவருகின்றது. தேர்தலில் விருப்பு வாக்குகளை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உள்வீட்டு மோதல்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்று செல்லத் தீர்மானித்தாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் தேர்தலில் விருப்பு வாக்குகள் அதிகம் பெறவேண்டுமாயின் மிகுந்த பணம் செலவிடவேண்டிவரும் எனவும் அதற்கான பணம் தன்னிடம் இல்லை எனவும் கூறியிருந்தார்

No comments:

Post a Comment