Sunday, March 7, 2010

நிருபமா - ஜனாதிபதி சந்திப்பு : மன்மோகன் சிங்கிடமிருந்து அவசர அழைப்பு.

நேற்றிரவு 10.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் இன்று இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா, இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியை சந்தித்த நிரூபமா ஜனாதிபதியை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் முடிந்த சீக்கிரம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் தேர்தலில் 1000 இக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வடகிழக்கு பகுதியில் போட்டியிடுவது அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் 3 நாள் காலத்தினுள் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment