Tuesday, March 30, 2010

வன்னியில் கைப்பற்றப்பட்ட தங்கம், பணம் பாதுகாப்பாகவுள்ளது. பசில் ராஜபக்ச.

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது வங்கிகளின் பெட்டகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் என்பன பாதுகாப்பாகவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிந்துவத்தை பிரதேச வங்கி ஊழியர்களின் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் இன்று காலைபேசிய அவர், வன்னியிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், பணம் என்பன பாதுகாப்புப் படையினரால் கையளிக்கப்பட்டபோது அது தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடாத்தப்பட்டு அவை பாதுகாப்பாக இரு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடானது உலகிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நாம் அவற்றை உரிய முறையில் கையாண்டுள்ளோம். எமது செயற்பாடுகளையிட்டு வன்னி மக்கள் திருப்தியடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com