Monday, March 15, 2010

இலங்கை ஜனநாயகமற்ற நாடாக மாறியுள்ளது. சரத் என் சில்வா.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நிராகரித்து கடந்த சில வருடங்களாக ஒர் ஜனநாயகமற்ற நாடாக மாறியுள்ளது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ஜெனரல் பொன்சேகாவினை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவும் அவர் ஏதாவது குற்றங்கள் செய்திருந்தால் அக்குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் சிவில் நீதிமன்றொன்றிலேயே இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment