Sunday, March 28, 2010

செல்வம் அடைக்கலநாதனுக்கு அடம்பனில் மக்கள் தர்ம அடி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடம்பன் பிரதேசத்திற்கு சென்றிருந்தபோது பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் லொறிக்கணக்கான வாக்குறுதிகளுடன் வந்த உங்கள் வாக்குறுதிகளை நம்பி நாம் உங்களைப் பாராளுமன்றம் அனுப்பியிருந்தோம். எமது பொது தேவைக்காக நாம் உங்களை பாராளுமன்றம் அனுப்பியபோதும் நீங்கள் பெற்ற பாராளுன்ற ஆசனங்தின் பலாபலன்களை உங்களது குடும்பத்தினரும் உற்றார் உறவினருமே அனுபவித்தனர். உங்கள் குடும்பத்தினரை செல்வந்த நாடுகளில் குடியேற்றிவிட்டு மீண்டும் எம்மிடம் வாக்கு கேட்டா வந்திருக்கின்றாய் என முதல் முதலில் ஒரு வயோதிபரே செல்வம் மீது தாக்குதல் தொடுத்தகாவும் அதை தொடர்ந்து பிரதேச மக்கள் அனைவரும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உங்களை பாராளுமன்றிற்கு அனுப்பி என்னத்தை எங்கள் பிரதேசத்திற்கு செய்து தந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய மக்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போது மட்டும் எமது உதவி தேவையா? எனவும் கேள்விகளை எழுப்பியதுடன் இனிமேல் இந்த பகுதிக்கு நீங்கள் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

3 comments:

  1. Tamils future depends on voters decisive and intelligent decision.
    You can cheat the people for a short period.You cannot play the game for a long time.Period of dark ages and blind voters are over.The present voters are sensitive and intelligent.Hope the captain of the ship will the get award at Trincomalee.

    ReplyDelete
  2. selvem .....the Tuth never sleeps.
    you safe Prabakaran and his family in 1986. after Srianna dead (the guy who make you a man) .see what happen today..........where you uesd to dance in the bus stand a low life. then run away with married woman today you are a fool ..... i love you adampan.

    ReplyDelete
  3. What a great resource!

    ReplyDelete