Monday, March 15, 2010

'பிரிட்டன் நீதித்துறை ஒருதலைபட்சமாக உள்ளது'

பிரிட்டன் கிரிமினல் நீதித்துறை, ஆசிய மற்றும் கறுப்பு இளைஞர்களுக்கு எதிராக உள்ளதாக அந்நாட்டின் சமத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள கறுப்பு மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், வெள்ளை இன இளைஞர்களுக்கும் இடையே குற்றவியல் தொடர்பான நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் காவல் துறையினர், பொது இடங்களில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்வதிலும் இனப்பாகுபாட்டை கடைபிடிப்பதாகவும் அந்த ஆணையம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் இளைஞர்களுக்கு முன் பிணை வழங்குவதிலும் இதே பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. They preach a lot about the human rights,humanity peace love and brotherhood etc etc., but in action they do something else.This cannot be
    erased out.nepotism and favouritism are very common around the world

    ReplyDelete