Wednesday, March 10, 2010

மேலுமோர் வேட்பாளர் ரிஐடி யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சிறிலால் லக்திலகே இன்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கிய ஆதரவு தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரலுக்கு ஆதரவாக செயற்பட்ட பலரையும் சீஐடி யினர் விசாரணை செய்து வருவதாகவும், அதே நேரம் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்த பலம்வாய்ந்த அமைச்சர்ளை விசாரணை செய்யத் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளது

No comments:

Post a Comment