Monday, March 15, 2010

விருப்புவாக்குகளுக்காக சண்டை பிடிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவு.

தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானதிலிருந்து இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் விருப்பு வாக்குகளுக்காக ஆழும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள்ளே மோதிக்கொண்ட சப்பவங்கள் பரவலாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் விருப்பு வாக்குகளுக்காக சண்டைபிடிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது முன்னணியின் வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுக்காக மோதும் சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானித்ததை அடுத்தே ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment