Wednesday, March 24, 2010

ரஜரட் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டம் மிகிந்தலைப் பிரதேசத்தில் உள்ள ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே மூண்ட கலவரத்தை அடுத்து பல்கலைக் கழகத்தின் மூன்று பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் எற்பட்ட சச்சரவு ஒன்றை அடுத்து இன்றுகாலை மாணவர்கள் கிராமவாசிகளால் தாக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறைந்தது 3 பேர் தாக்குதலில் காயமடைந்தள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment