Friday, March 19, 2010

முசம்மிலுக்கு கப்பம் : மயோன் முஸ்தபாவிற்கு பிணை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸாமிலுக்கு, மயோன் முஸ்தபா 4.2 மில்லியன் ரூபா பணம் கொடுத்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று இன்று நீதிமன்றில் ஆஜராகிய மயோன் முஸ்தபாவிற்கு நீதிமன்று பிணைவழங்கியுள்ளது.

ஒவ்வொன்றும் ஒரு மில்லியன் ரூபா இரு சரீரப்பிணையில் விடுதலை செய்த நீதிமன்று அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment