Wednesday, March 24, 2010

சிரச மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் விடுதலை.

சிரச மற்றும் எம்ரிவி தலைமைக்காரியாலயம் மீது நேற்றுமுன்தினம் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு விரைந்த பொலிஸார் காடையர்களில் 16 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று கொம்பனிதெரு பொலிஸாரால் பிணைவழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்றினை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் அப்பட்டமான அத்துமீறல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியிருப்பது குறிப்பிட்ட காடையர்கள் அரசின் உயர்மட்டத்தினரின் அனுசரணையுடனனேயே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

No comments:

Post a Comment