Monday, March 29, 2010

மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள் நால்வர் அரசில் இணைவு.

மட்டு. மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 4பேர் ஐ.ம.சு.முவில் இணைந்து கொண்டதுடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அலிஸாஹிர் மெளலானாவை ஆதரிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.

இவர்களது இந்த தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பு அலிஸாஹிர் மெளலானா வின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்றது.

மாநகரசபை உறுப்பினர்களான கந்தையா அருமைலிங்கம், வெலிங்ரன் ராஜேந்திர பிரசாந்த், செல்வராசா சசிகுமார் மற்றும் மகேந்திர மூர்த்தி சுரேந்திரன் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமது முடிவுகளை வெளியிட்டனர்.

thanks. Thinakaran.

No comments:

Post a Comment