Tuesday, March 9, 2010

பாதாள உலகத்தினை சேர்ந்தவர்கள் என இருவர் சுட்டுக்கொலை.

குருநாகல் படகமுவ பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் 28க்கு மேற்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன், நேற்று பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாகவும், இவர்கள் படகமவில் உள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் அவ்வீட்டினை சுற்றி வளைத்தபோது, அவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், பொலிஸார் மேற்கோண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment