Monday, March 8, 2010

இனந்தெரியாத உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

களனி கங்கையுடன் இணைந்ததாக கொழும்பு முகத்துவாரம் பெர்குஷன் வீதிக்கு அருகில் சேற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சடலம் மீட்கப்பட்டுள்ள பகுதிக்கு மிக அண்மையில் முகத்துவாரம் இராணுவ முகாம் காணப்படுகின்றது.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க 5 அடி 3 அங்குலம் நீளமுடைய தடித்த மீசைகளை கொண்ட ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ஊடலில் பின்புறத்தில் வலது பக்கதோளுக்கு கீழே இரு காயங்களும் முழங்காலுக்கு கீழே இரு காயங்களும் காணப்படுவதாக தெரியவருகின்ன்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இன்றுமாலை வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment